Wednesday, 28 March 2012

கவிழ்ப்பு

 உன்
 முன்
 தலை
 நிமிர்த்தி
 நான்
 பேச
 வரும்
 பொழுதெல்லாம்
  நீ
 ஏன்
 அடிக்கடி
 தலை
 கவிழ்கிறாய்
 ஒலிவாங்கியே     
    

பெரிசு

தோளிலும்
மார்பிலும்
தூக்கி
சுமந்த
தந்தை
இன்று
பெயர்
எடுக்கிறார்
மகனிடம்
அந்த
பெரிசு
என்று        

ஊன்றுகோல்

தசைகள்
தளர்ந்தாலும்
மூன்றாம்
காலாக
ஊன்றுகோலையும்
முதல்
கையாக
தன்னம்பிக்கையுடனும்
இன்றைய
மூத்த
குடிமகன்கள்        

சம்சாரி

இளங்கலை
கடந்து
முதுகலை
முடிப்போம்
முடிந்துவிட்டது
அத்தனை 
கலைகளும்
இங்கே
வந்துவிட்டது
முதுமையும்
இன்று
வரை
கிடைக்கவேயில்லை
சம்சாரி
பட்டம்             
 

நகரத்து மனைவி

கண்டாங்கி
சேலைக்
கட்டி
படிய
படிந்த
தலை
வாரலுடன்
 நெற்றியில்
எடுப்பாய்
குங்கும
போட்டிட்டு
மூக்குத்தி
மின்ன
டோலாக்கு
ஆட
கொலுசு
சத்தம்
இனிமையாய்
காதில்
ஒலிக்க
கிராமிய
பாடல்
பாடிக்
கொண்டு
அத்தான்
என்று
அழைத்தவளை
ஏறெடுத்து
பார்க்கையிலே
டியர்
பெட்
காபி
என்று
கையில்
ஆங்கில
செய்தித்
தாளுடன்
இரவு
உடையில்
கனவை
கலைத்து
நின்றால்
நகரத்து
மனைவி
                    
             
 
     

 

Tuesday, 27 March 2012

இனவெறி

காக்கையும்
கழுகும்
ஒரே
கூட்டில்
இனவெறியில்லாமல்
தொலைக்காட்சி
கருத்துப்
படத்தில்
மட்டும்











Saturday, 24 March 2012

புதைப்பு

மனதில்
எழும்பியது
ஆசை
குழித் 
தோண்டி
புதைக்கின்றேன்
பின்
தொடர்கிறது
நிறைவேறா
ஆசைகள்



Wednesday, 21 March 2012

கரை

நீயோ
அக்கரையில்
வாசம்
நானோ
அககறையில்
உன்
வசம்
எக்கரையிலும்
கேட்கவில்லை
உன்
குரல்
இக்கரையில்
மௌன
மொழி
பேசுகிறேன்
எக்குறை
கண்டாயோ
என்னிடம்
ஏதும்
அறியாமல்
உறைந்து
போய்
நிற்கின்றேன்

துடைப்பான்

கரும்பலகையாய்
உன்
மனம்
துடைப்பானாய்
நான்
உருமாறினேன்
நிறம்
மாற
மறுக்கும்
ஜட
பொருளாய்
நீ


ஆட்டம்

நிஜ
கால்களுடன்
ஆடுகிறான்
பொய்க்கால்
குதிரை
ஆட்டத்தில்
கலைஞன்

  

உருவம்

உன்னை
நினைக்க
வேண்டாம்
என்று
நினைக்க
நினைக்க
உன்
உருவ
ஒற்றுமையுடன்
எதிரில்
கடந்து
போகும்  
உருவத்தால்
மீண்டும்
நினைக்க
வைக்கிறது
உன்
அன்பை.

Tuesday, 20 March 2012

காந்தியம்

பண்டிகைக்
காலங்களில்
மட்டுமே
நீயும்
கதரும்
நினைவுக்கு
வருகிறீர்கள்
நீ
மேல்
சட்டையை
ஏழைகளின்
நிலை
கண்டு
துறந்தாய்
இன்று
மேலாடைகள்
விளம்பரங்களுக்காகவும்
கவர்ச்சி
அணிவகுப்புக்காகவும்
களையப்படுகின்றன
கொலையும்
கொள்ளையும்
தலை
விரித்தாடுகின்றன
காந்தியம்
பேசிய
உதடுகள்
இன்றைக்கு
கோட்சேயிசம்
பேசுகின்றன
(வார்ப்பு.வலைதளத்தில் 2011 இல் வெளியானது)


.




ஊடல்

கலிங்கத்துபரணியாய்
ஆரம்பிக்கும்
நம்
ஊடலில்
இறுதியில்
ஜெயிப்பது
இருவருமே








மெத்தனம்

உன்
வரவால்
வலையிலிருந்து
தப்பிய
மீன்கள்
போல்
என்
விழிகள்
உயிர்
பெற்றன
கால்கள்
மான்களாயின
இதயம்
இரங்கராட்டினமாய்
அத்தனை
மாற்றங்களும்
வேகமாய்
நீயோ
எனக்குள்
ஆமையாய்!!!!






முத்தம்

சாலையோரம்
கைப்பிடித்து
பதித்த
முதல்
முத்தம்
திரையரங்கு
இருட்டில்
அவசரமாய்
தித்தித்த
முத்தம்
மாடிப்படிகளில்
மறைந்து
மலர்ந்த
முத்தம்
அறையில்
அத்து மீறி
ஆசையில்
அளித்த
முத்தம்
குறுஞ்செய்திகள்
வாயிலாய்
கைப்பேசியில்
கொடுத்த
கணக்கில்லா
முத்தங்கள்
நினைவில்லையா?
முத்தங்கள்
மொத்தமும்
மௌனமாய்
போனது
ஏனோ?
இதழ்கள்
பாலைவனமானது
முத்தங்கள்
கானல்
நீரானது
என்
அன்பே !!!!!!
   



இதயம்

கரையானாய்
அரிக்கிறது
இலவம்பஞ்சாய்
 வெடிக்கிறது
காணாமல்
போன
இதயங்களின்
சங்கமம்.

Friday, 16 March 2012

அத்தான்

சிறு
வயதில்
என்னை
சுற்றி
சுற்றி
வந்து
ஞாபக
சக்தி
அதிகரிக்க
நீ
கொடுத்த
வல்லாரை
கீரை
வருடங்கள்
பல
கடந்த
பின்னும்
ஞாபகமாய்
உன்னை
அழைக்க
வைக்கிறது
அத்தான்
என்று