Tuesday 31 January 2012

சாபம்

அகலிகைகளும்
மன்மதன்களும்
பெருகி
போனார்கள்
கலியுகத்தில்
கல்லாய்
சபிக்க
கௌதமர்கள்
குறைந்து
போனதால்



மறப்போம் மன்னிப்போம்

உயிரோடும்
உணர்வோடும்
போராடிய
போது
தலைக்காட்டவில்லை
உறவுகள்
உயிர்
பிரிந்த
பின் 
வந்து
பலா
பிசினாய்
ஒட்டிக்கொள்கிறார்கள்
சொத்திற்கும்
சுகத்திற்கும்
இயேசுவின்
வார்த்தைகள்படி
மறப்போம்
மன்னிப்போம்
என்று
செய்தவைகளை
எல்லாம்
மறந்து



தவிர்த்தல்

கைகள்
தவிர்த்து
கால்களால்
காதல்
கோலம்
போடுகிறேன்
உன்
முகம்
பார்த்த
பொழுதில்

காதல் அலை

கடற்கரையில் 
அமர்ந்து 
இருக்கையில்
நம் 
காதல்
அலையின்
அமைதியை
காணப்
பொறுக்காத
கடல்
அலை
பொங்கி
எழ
மறுக்கிறது
தன
சுயம் 
மறந்து







ஒற்றை புள்ளி

ஒற்றை
புள்ளியாக
இறுதியில்
இருந்த
என்னை
பல
புள்ளிகளுடன்
இணைத்து
வண்ண 
கோலமாக்கி
பார்த்து
வியக்க
நீ
அருகே
இல்லாமல்
பரிதவிக்குது
என்
மனம்
சிறகு
முளைத்தும்
பறக்க
முடியாத
வலிமையற்ற
பறவை
போல்



Monday 9 January 2012

இடைவெளி

என்னில் நிறைந்து 
இருக்கிறாய் நீ.....
உன்னில் குறைந்து 
நான் போன 
காரணம் 
அன்பின்
இடைவெளியா ?
தொலைதூரத்தின் 
இடைவெளியா??????