கண்டாங்கி
சேலைக்
கட்டி
படிய
படிந்த
தலை
வாரலுடன்
நெற்றியில்
எடுப்பாய்
குங்கும
போட்டிட்டு
மூக்குத்தி
மின்ன
டோலாக்கு
ஆட
கொலுசு
சத்தம்
இனிமையாய்
காதில்
ஒலிக்க
கிராமிய
பாடல்
பாடிக்
கொண்டு
அத்தான்
என்று
அழைத்தவளை
ஏறெடுத்து
பார்க்கையிலே
டியர்
பெட்
காபி
என்று
கையில்
ஆங்கில
செய்தித்
தாளுடன்
இரவு
உடையில்
கனவை
கலைத்து
நின்றால்
நகரத்து
மனைவி
நீயோ அக்கரையில் வாசம் நானோ அககறையில் உன் வசம் எக்கரையிலும் கேட்கவில்லை உன் குரல் இக்கரையில் மௌன மொழி பேசுகிறேன் எக்குறை கண்டாயோ என்னிடம் ஏதும் அறியாமல் உறைந்து போய் நிற்கின்றேன்
பண்டிகைக்
காலங்களில்
மட்டுமே
நீயும்
கதரும்
நினைவுக்கு
வருகிறீர்கள்
நீ
மேல்
சட்டையை
ஏழைகளின்
நிலை
கண்டு
துறந்தாய்
இன்று
மேலாடைகள்
விளம்பரங்களுக்காகவும்
கவர்ச்சி
அணிவகுப்புக்காகவும்
களையப்படுகின்றன
கொலையும்
கொள்ளையும்
தலை
விரித்தாடுகின்றன
காந்தியம்
பேசிய
உதடுகள்
இன்றைக்கு
கோட்சேயிசம்
பேசுகின்றன
(வார்ப்பு.வலைதளத்தில் 2011 இல் வெளியானது)
உன்
வரவால்
வலையிலிருந்து
தப்பிய
மீன்கள்
போல்
என்
விழிகள்
உயிர்
பெற்றன
கால்கள்
மான்களாயின
இதயம்
இரங்கராட்டினமாய்
அத்தனை
மாற்றங்களும்
வேகமாய்
நீயோ
எனக்குள்
ஆமையாய்!!!!
சாலையோரம்
கைப்பிடித்து
பதித்த
முதல்
முத்தம்
திரையரங்கு
இருட்டில்
அவசரமாய்
தித்தித்த முத்தம்
மாடிப்படிகளில்
மறைந்து
மலர்ந்த முத்தம்
அறையில்
அத்து மீறி
ஆசையில்
அளித்த முத்தம்
குறுஞ்செய்திகள்
வாயிலாய்
கைப்பேசியில்
கொடுத்த
கணக்கில்லா
முத்தங்கள்
நினைவில்லையா?
முத்தங்கள்
மொத்தமும்
மௌனமாய்
போனது
ஏனோ?
இதழ்கள்
பாலைவனமானது முத்தங்கள்
கானல்
நீரானது
என்
அன்பே !!!!!!
சிறு
வயதில்
என்னை
சுற்றி
சுற்றி
வந்து
ஞாபக
சக்தி
அதிகரிக்க
நீ
கொடுத்த
வல்லாரை
கீரை
வருடங்கள்
பல
கடந்த
பின்னும்
ஞாபகமாய்
உன்னை
அழைக்க
வைக்கிறது
அத்தான்
என்று