Thursday 12 April 2012

காதல்

மனதில்
உள்ள
காதலை
சொல்லாமல்
தவிக்கிறேன்
கருவை
சுமப்பதற்கு
சமமாய்
தேர்வு
எழுதினால்
தோற்றுப்
போய்
விடுவோமோ
என்ற
அச்சத்தைப்
போல்
எத்தனை
நாட்கள்
கருவை
சுமப்பேன்
பிரசவித்து
தானே
ஆக
வேண்டும்
வெற்றி
தோல்வியைத்
தாண்டி
காதல்
வழி
நடத்துகிறது
காதலை
உணர்கின்ற
தருணமும்
காதலோடு
வாழ்கிற
தருணமும்
அற்புதமானது
தூது
விடுகிறேன்
நவீன
யுகத்தில்
பாதுகாப்பாய்
ஏற்பாய்
என்ற
எதிர்பார்ப்புடன்
எதிர்ப்பாயா??
எதிர்கொள்வாயா????
 
 (வளரி  இதழில் பிப்ரவரி  2012  இல் வெளிவந்தது )                
   
    
              
 

ஓவியம்

அன்பு
என்ற
ஓவியம்
அழகானது
ஒரு
முறை
கை
தவறி
அதன்
மீது
கறை
படிந்துவிட்டால்
கை
தேர்ந்த
ஓவியராக
இருந்தால்
மட்டுமே
சரி
செய்ய
முடியும்
        
         
 

சவுக்கு

சிலுவையை
சுமந்து
பயணித்த
போதும்
ஆணியால்
அறைய
பட்ட
போதும்
வலியை
பொறுத்துக்
கொண்ட
நீ
அவன்
வார்த்தை
சவுக்கின்
சுழற்றலை
தாங்கும்
சக்தியை
எனக்கு
பரிசளிப்பாயா????
 
    
   
 
     
 

நடிகை

தாய்
இறந்த
செய்தி
அறிந்தும்
அழ
முடியாமல்
பிணமாக
படுத்திருந்தால்
துணை
நடிகை  
       

சட்டம்

இனிக்க
இனிக்க
பேசி
இன்பமாய்
கழித்த
பொழுதுகளில்
வாக்குறுதிகளுக்கு
பஞ்சமில்லை
உன்னிடம்
இன்று
பேசுவதற்கே
தடா
சட்டம்
போட்டுவிட்டதோ
உன் 
நாக்கு
  
  
     
  


     
 

Monday 9 April 2012

கீழும் மேலும்


 கீழும்
மேலுமாய்
மேலும்
கீழுமாய்
திரும்ப
திரும்ப
படித்தும்
புலப்படவில்லை
மேகங்களுக்குள்
மறைந்து
வெளிவரும்
நிலவை
போல்
நீ
எழுதிய
கவிதையும் 

          

மூன்றாம்பிறை

மூன்றாம்பிறை
முழுமதி
பட்டாம்பூச்சி
அனைத்துடனும்
ஒருமைப்படுத்தி
வெளிப்படுத்துகிறாய்
உன்
காதலை
தேய்பிறையாய்
தேய்ந்து
கொண்டிருக்கும்
அவளிடம் 
         

Thursday 5 April 2012

தரம்

வீணை
மீட்ட
ஆசைப்பட்டேன்
ஸ்ருதி
சேரவில்லை
நடனம்
ஆட
நினைதேன்
பதம்
வரவில்லை
பாட
பழகி
பக்குவம்
அடையவில்லை
அழகாய்
வாழ
வழி                              
தேடினேன்
தரமாய்
கிடைத்தாய்
நீ
                 
    

வரம்

மலடி
என்ற
பழிக்கு
குழந்தை
வரமில்லை
கேட்காமல்
கிடைக்கிறது
குப்பையில்
வீசும்
தாய்க்கு

    
     

 

சுனாமி

உன்னிடம்
சரண்
அடைந்திருக்கும்
மீன்களை
கொல்வதால்
நர
மாமிசம்
உண்ண
ஆசைப்பட்டது
தான்
சுனாமியோ????
   
      

விட்டில்பூச்சி

விளக்கை
தேடி
போகிறது
சேய்
விட்டில்பூச்சி
அது
அறியவில்லை
கீழே
கிடக்கும்
சாம்பல்
தன்
தாயுடையது
என்று
  
         

ஏழாவது அறிவு

என்னுள்
கிளர்ந்தெழும்
எண்ணங்கள்
யாவும்
புதைந்தபடி
திறவுக்கோலாய்
செயல்பட
நினைக்கிறது
ஏழாவது
அறிவு.       

தழும்பு

உன்னால்
ஏற்பட்ட
ரணங்கள்
மாறிப்
போனது
தழும்பாக
மருந்திட
இப்போது
வருகிறாய்
கண்கெட்ட
பிறகு
சூரிய
நமஸ்காரம்
செய்வது
போல்.     
        


 

பிரதிபலிப்பு

யாரோ
எழுதிய
கவிதைகளில்
என்
மன
பிரதிபலிப்பு
யோசித்து
பார்கின்றேன்
இது
நான்
நேற்று
மனதிற்குள்
பேசி
பார்த்த
வார்த்தைகள்
அல்லவா ??