Wednesday 30 November 2011

இம்சை

தோல்
உரித்து
காட்டப்படுகிறது
இம்சையின்
அடையாளம்
ஆடுகளிலும்
கோழிகளிலும்
கசாப்பு
கடைகளில்



வேறென்ன விசேஷம்

அலைபேசியில்
பகிர்ந்து
கொண்டிருக்கிறோம்
உள்வாங்கிய
என்
அன்பை
உண்மையாக
வெளிப்படுத்த
முடியாமல்
தொண்டைக்குழியில்
நிறுத்திக்
கொண்டு
பொய்யாக
தொடர்கிறாய்
வேறென்ன
விசேஷமென்று
27.11.11 கல்கியில் வெளியானது








Monday 28 November 2011

பாரதிசொல்மறந்து

 நிமிர்ந்து
நடக்க
ஆசைப்பட்டும்
முடியவில்லை
மனிதர்கள்
உமிழ்ந்து
விட்டு
போகும்
எச்சில்களும்
மிருகங்களின்
கழிவுகளினாலும்
தலைக்குனிந்தே
நடக்கிறேன்
நான்
பாரதி
சொல்
மறந்து
     

   
       
 

சரணாலயம்

வயிற்று
பசிக்காக
உடலை
விருந்தாக்கி
 பகலில்
வாழ
இரவை
விற்று
தந்தையால்
காதலனால்
தள்ளப்பட்டு
விலைமகள்
பெயருடன்
வாழும்
அபாக்யவதிகளின்
சரணாலயம்
விபச்சார விடுதி
               

Saturday 19 November 2011

காத்திருப்பு

 ஐப்பசி
 வரை
 காத்திரு
 எந்த
 வருடத்தில்
 சொல்லவில்லையே
 காத்துக்
 கொண்டுதான்
 இருக்கிறேன்
 கிடைக்கவில்லையே
  தேடல்கள்
  தொடரும்
  காத்திருப்பின்
  கண்ணியம்-
  களங்கப்படாமல்.  
   
      

   

 



 

Friday 18 November 2011

ஆலாபனை

பூபாளமும்
நீலாம்பரியும்
தினமும்
பாடிக்
கொண்டுதான்
இருக்கிறோம்
முகாரி
இருவருக்குள்ளும்
ஒலித்துக்
 கொண்டிருப்பதை
மறந்து. 
 
 
        

நினைவு

    குதிரையின்
    குளம்பு
    ஒலியென
     என்னுள்
     உன்
     நினைவுகள்
     அசை
     போட்டு
     பொதி
     சுமக்கும்
     காளையாக
     நீ.
   
  

    

கோபம்

   நினைத்தேன்
   உன்னை
   மழையெனப்
   பொழிந்தாய்
   அன்பை
   ஆயினும்
   வறண்ட
    நிலமாய்
     நான்
     உன்னில்
     கிளர்ந்தெழும்
      கடுங்கோபாம்
     என்னில்
     உன்னை
     நீர்த்துப்
     போக
      செய்திடுமோ?
  
       
 

தீபம்

    விழி   
    தீபமாயிருந்து
    ஒளி 
     தந்துக்
     கொண்டிருக்கிறாய்
     நீ.
     மூழ்கி
     கிடந்த
     இருட்டின்
      பிடியிலிருந்து
      வெளிப்படுகிறேன்
       நான்.
         
     
  

Tuesday 15 November 2011

விடுதலை

 விளக்கில்
 அடைப்பட்ட
 பூதமாய்
 பெண்
 சுதந்திரம்
 விடுதலை
 செய்ய
  எந்த
 அலாவுதீன்??????     

ஜனனம்

   ஜனித்தது
   கவிதைப்
   பூக்கள்
   வலியில்லாமல் 
   புத்தகமெனும்
   தோட்டத்தில்

   

சாம்பல்

தடித்த
உன்
வார்த்தைகளால்
எரிந்து
போய்
விட்டேன்
மீண்டும்
எரிக்க
முடியாது
சாம்பலாகி
போன
என்னை!!!!!!!
           

மனோபலம்

   ராணியாக
   மனோபலத்துடன்
   போராடுகிறேன்
   ராஜா
   வீழ்ந்த
   பின்னும்
   இதர
    சேனைகளுடன்
    சதுரங்க
    விளையாட்டில்
     மட்டுமல்ல

         
 
  

முழுமை

  தூரிகையின்றி
  வரைந்தோம்
  நம்
  கண்களால்
  முழுமை
  அடைந்தது
  காதல்
  ஓவியம்
 
   

   
 

எறும்பு

 வரிசை
 கலையாமல்
 நகர்கின்றன
 நியாய விலைக்
 கடையில்
 பணம்
 செலுத்தாமல்
 சர்க்கரையோடு
 எறும்புகள்
      

   
  
 

Monday 14 November 2011

விருந்து

ஊதி
ஊதி
நெருப்பாய்
பற்றிக்
கொண்டது
நம்
அன்பெனும்
அடுப்பு
நல்ல
நளபாகமாக
இருக்கும்
அந்த
நள தமயந்தி
விருந்து
 

  
 
       

 

புரிதல்

 எங்கள்
 வீட்டு
 குழாய்க்கும்
  என்
  கண்களுக்கும்
  ஒரு
   புரிதல்
   நீர்
   வரும்
   காலம்
   தெரியாது
      

பட்டியல்

    எல்லாவற்றையும்
    பட்டியலிட்டு
    பிடிக்குமா
    என்று
    கேட்கிறாய்
    மறைமுகமாய்  
     நீ
    பைத்தியம்
    தவிர
    அனைத்தும்
    பிடிக்கும்
    என்கிறேன்
    நான் 

  
    
    
    

அளவு

  என்
  அன்பை
  அளவிட
  வண்ணங்களை
  அனுப்பி
  பிடித்ததை
   அவசியமாய்
   சொல்ல
   சொல்கிறாய்
   நான்
   சொல்லும்
   வண்ணத்தில்
   என்
   அன்பின்
   சதவிகிதம்
   குறைந்தால்
   தாங்குவாயா
   நீ ?   
 
 
       
      


 

அபாயம்

   சிகப்பு
   நிறம்
   அபாயத்திற்கும்
   தொடராமல்
    இருப்பதற்கும்
    ஏன்
    நீ
    அறியாமல்
    பின்
    தொடர்கிறாய்
    நிறம்
    மறந்து

    
 

Wednesday 9 November 2011

தூக்கம்

  என்
  மனம்
 அறியாமல்
 தூங்கிக்
 கொண்டிருக்கிறாய்
 உன்
 தூக்கம்
 கலையாமல்
 இருக்க
 அமைதியாய்
  திரும்பி
  படுக்கிறேன்
  நீ
 விரும்புவது
 அழகையா
 அறிவையா
 அன்பையா
 எனத்
 தெரியாமல்
 நான்
 விழித்திருக்க
 விழித்திருப்பது
 அறியாமல்
 அலைபேசியில்
 பேசிக்
 கொண்டிருக்கிறாய்
 அன்புக்கு
 நான்
 அடிமை
 என்று
                   
      

மாற்றம்

   உன்
   மௌனம்
   என் 
   மரணம்
   பிடிக்கவில்லை
   என்றாய்
   பிடித்துக்
   கொண்டாய்
   என்னை
   மரண
   தண்டனை
   கொடுத்து
   விடாதே
  ஆயுள்
  கைதியாய்
  ஆக்கிவிடு
   உன்
   மனம்
  என் 
  மரணத்தில்
  கூட
  மாறாது
  என்பதால்
    
              



ஜொலிப்பு

 முன்
 வந்த
 நாட்களில்
 பௌர்ணமியாய்
 ஜொலித்து
 கொண்டிருந்த
 என்னை
 பின் 
 வரும்
 நாட்களில்
 அமாவாசை
 இருட்டாக்கி
 நீ
 மட்டும்
 நட்சத்திரமாய்
 மின்னி
 கொண்டிருக்கிறாய்
 என்றும்
 வானில்
   
  




    
  
 


   

விடியல்

  இரவு
  என்றால்
 விடியல்
 உண்டு
 ஆனால்
  நீ
 முகவரில்லா
 ஊருக்கல்லவா
 விடை
 தேடுகிறாய்
 ஒரு
 தலைக்
 காதலில்.
     
       

சிற்பி

    சிற்பியாக
    உளி
    கொண்டு
    செதுக்கினாய்
    என்னை.
    பொறுமையுடன்
    வலி
    பொறுத்ததால்
    வணங்கும்
    தெய்வ
    சிலை
    ஆகி
    போனேன்
     நான்.
   
 
 







 
   
 

சொப்பு

 சொப்பு
 வைத்து
 சமைத்து
 பரிமாறும்
 அப்பா
 அம்மா
 விளையாட்டில்
 அம்மாவிடம்
 அடி
 வாங்கும்
 அப்பா
 இந்தக்கால
 குழந்தைகள்
            
 
 

 

ஆறுதல்

     உன் 
     நினைவுகளால்
    ஆறுதல்
    அடைகிறது 
     என் 
     கண்கள்
     உன்னை 
     தேடும்
     போது
      உன் 
     அன்பை
     தேடும்
     எனக்கு
     ஆறுதல்
      நம்
      காதல்
      மட்டுமே
   
    

Saturday 5 November 2011

கண்ணாடி

   உனக்கும்  எனக்குமான  அன்பை
   உனக்கும்  எனக்குமான   உரையாடலை
   உனக்கும்  எனக்குமான    நட்பை
   எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும்
   கைக் குலுக்குவதையும்
   கைக் கோர்பதையும்
   கருப்பு கண்ணாடி என்ன
   வெள்ளை கண்ணாடி போட்டாலும்
   ஏழு வண்ணங்களிலும்
   கற்பனை குதிரையை தட்டி விடட்டும்
   என்ன வேண்டுமானாலும்
   நினைத்து  விட்டுப்  போகட்டும்
   தோள் கொடுக்கும் தோழனாகவும்
   தோள் சாயும்   தோழியாகவும்
   நம் தோழமை மிளிரட்டும் !!!!!
 

        


    

 
 
 

 
  
 


அழைப்பு

  உன் 
 அழைப்புக்கு
 காத்திருக்கிறது
 கைப்பேசி
 என்னைப்
 போலவே
 குறுஞ்செய்தி
 மட்டும்
 என்று
 வரும்
 பதிலில்
 ஏமாற்றம்
 இருவருக்கும்
  பண்பலையிலும்
 ஒலித்தது
 ஏமாற
 சொன்னது
 நானா ?   
  

          
 

இரசிகர்கள்

   மயில்
  ஆடுவதையும்
  குயில்
  கூவுவதையும்
  இரசிக்காமல்
  மயிலுக்கும்
  குயிலுக்கும்
  இரசிகர்கள்
       

நீச்சல்

   நினைவுகளோடு
   நீந்திக்
  கொண்டிருக்கிறேன்
  அரைகுறை
  நீச்சலால்
  கரை
  சேர
 முடியாமல்
  தேடலில்
    
    
 

நாடி

 பிறந்த
 நாளிற்குப்
 பரிசு
 கைக்
 கடிகாரம்
 ஓ தோழா
 அதில்
 உன்
 நாடிப்
 பிடித்து
 பார்த்துக்
 கொண்டிருக்கிறேன்
 நான்.
 
     
      

Friday 4 November 2011

எரிமலை

 தடுமாறும்
 அரசாங்கம்
 தடம்
 மாறும்
 தொடர்
 வண்டிகள்
 தடுக்கி
 விழும்
 ஆண்
 பெண்
 உறவுகள்
 வீணானது
 உயிர்
 வெடித்தது
 எரிமலையாய்
 இதயம்
               
 

காகிதப்பூ

 பூச்சூடிக்
 கொள்ள
 முடியாத
 பூவைக்கு
 அனைத்து
 பூக்களும்
 காகிதப்
 பூக்களே
   
 
 
 

தூக்கம்

  பேருந்தில்
  தூக்கம்
  பாழாய்
  போனது
  பளிச்
  புத்தாடை
  சகப்பயணி
  
    

முத்து

  மூழ்கினேன்
  நட்பெனும்
  ஆழ்கடலில்
  கிடைத்ததோ
  நண்பராய்
  நல்முத்து
  பத்திரமான
  பாதுகாப்பில்
 முத்தல்லவோ
  கரையாமல்
  இருக்க
  நம்
  நட்பும்
   











 
 

       
 

வேலை வாய்ப்பு

 கோடிகளில்
 தொழில்
 நுட்ப
 பூங்கா
 கடைக்
 கோடிக்கும்
 எட்டாத
 வேலை
 வாய்ப்பு
        

உழைப்பு

 உதைப்பட்டும்
 நகரவில்லை
 உழைத்து
 உருமாறிய
 உருவம்
 மனைவி
    

மாற்றம்

  மாற்றுத்
  திறனாளிகள்
  என்று
  மாற்றபட்டனர்
  மாற்றமில்லாத
  மனிதர்கள்
  மத்தியில்
   
  
 
  

புயல்

 காதல் 
 வெளியீடு
 அடித்தது
 புயல்
 பெற்றவர்கள்
 மனதில்
    




இரவுப்பூக்கள்

  கனவுகள்
  போல்
  காலை
  எழும் போது
  இல்லை
  வாழ்க்கை
  இரவுப் பூக்களுக்கு
 
 
     

திரிசங்கு

 கோலாகல
 தீபாவளி
அனைவர்
வீட்டிலும்
 மதக் கொள்கையில்லாத
 அப்பா
 வேற்று மதம்
 தழுவும்
 அம்மா
 பிள்ளைகள்
 நாங்கள்
 திரிசங்கு
 சொர்க்கமாய்
            

Wednesday 2 November 2011

முனகல்

பல 
மொழிகள்
அறிந்திருந்தால்
மொழி
பற்றினால்
அல்ல
தொழிலுக்காக
வாய்
பேச
வாய்ப்பில்லா
தருணமதில்
தாய்மொழியே
முனகல்
தான்.           



பிரசவம்

 இந்த 
 முறையும்
 ஆணுக்கு
 பதிலாக
 ஒரு
 பெண்ணை
 பிரசவித்து
 குடும்பத்தில்
 அனைவரையும்
 மகிழ்ச்சியுற
 செய்தது
 அந்த 
 லக்ஷ்மி
 பசு.
           






கைநாட்டு

 இளமையில்
 கல்
 கல்லாமல்
 விட்டேன்
 கிடைத்தது
 கை
 மேல்
 பலன்
 கைநாட்டு
    
  

ஐந்தறிவு

ஊனத்தை
ஊழ்வினை
பயனாக்கி
குறைகளை
சாமி
குத்தமாக்கும்
மனிதர்களுக்கு
ஐந்தறிவு.
 
 
 
 



     

திருநங்கையர்

 பிறந்த
 போது
 ஆடவராய்
 வளர்ந்த
 போது
 பெண்மை
 கலந்து
 மங்கையராய்
 இன்று
 அம்மையப்பன்
 என்ற
 பெயருடன்
 கூடி
 மகிழ்கிறோம்
 திருநங்கையர்
 தினத்தில் .
           
  

சிலை

 செதுக்கப்பட்ட
 சிலையாய்
 நான்
 கல்லை
 தேடி
 நீ !
     

மணல் ஓவியம்

வரம்
வேண்டி
நின்றேன்
கிடைத்தது
மணலில்
வரைந்த
ஓவியமாய்
உன் 
காதல்.     

அன்பு மொழி

உன்
குரல்
கேட்காமல்
நாட்கள்
பல
வெறுமையாகின
இருந்தும்
ஒலித்த
வண்ணம்
இருக்கிறது
நாம்
பேசிய
அன்பு
மொழி.
             

அழகு

 விரிசல்
 விடாமல்
 இருக்கிறது
 என்
வீட்டிலுள்ள
ஆளுயுர
 கண்ணாடி
 என்று
 ஆச்சரியப்படாதே
 அது
 இரசிப்பது
 என்
 புற
 அழகையல்ல
 அக
 அழகை
 மட்டுமே.
   
 
     
 
    

யுத்தம்

 எங்கேயோ
 இருந்துக்
 கொண்டு
 என்னோடு
 யுத்தம்
 செய்துக்
 கொண்டிருக்கிறாய்
 நீ
 உன்
 அம்புகளை
 அன்போடு
 எதிர்க்கொண்டு
 ஜெயித்துக்
 கொண்டிருக்கிறேன்
  நான்.             

கணை

 அடுக்கடுக்காய்
 கேள்விக்
 கணை
 தொடுத்துக்
 கொண்டிருக்கிறாய்
 நீ
 கேள்விகளே
 கேட்டு
 பழக்கப்பட்டதால்
 பதில்
 சொல்ல
 முடியாமல்
 தடுமாறுகிறேன்
 நான்.
 
    
       

 

விரிசல்

விரிசல்
கண்டது
நம்
அன்பு
இருவரும்
சேர்ந்து
படித்த
போது
காதலாய்
தனியாக
ஆனவுடன்
ஒருவர்
மட்டும்
படிக்கும்
வேதமாய்.
              

உச்சவரம்பு

 கல்விக்கும்
 காதலுக்கும்
 ஒரு
 ஒற்றுமை
 வயதில்
 உச்ச 
 வரம்பில்லை

  
  
 

காயம்

 இதழை
கடித்துக்
கொண்ட 
போது
சொன்னார்கள்
யாரோ
திட்டுகிறார்கள்
என்று
யாருக்கு
தெரியும்
காயமானது
உன்னை
நினைத்ததால்
என்று .
           

அழுக்கு

 சுற்றுச்சூழல்
 பாதுக்காப்பு
  பற்றி
 பேச்சு
 மனதில்
 அழுக்குடன்.
   
 

Tuesday 1 November 2011

முடிச்சு

   மூன்று
   முடிச்சிற்கு
   அர்த்தம் 
  அறியாமல்
   நீதிமன்றம்
   சென்றவர்கள்
   விளம்பரம் 
   தருகிறார்கள்
   அடுத்த 
   மூன்று  
    முடிச்சிற்கு.
   


 

போராட்டம்

பூவிற்கும்
புன்னகைக்கும்
ஒரு
போராட்டம்
யார்
முதலில்
இதழ்
விரிப்பதென்று.



       
 

விருப்பம்

மரணத்தில்
கூட
உன்
மடி
சாய
விரும்பவில்லை
என்
சுமைகளுடன்
நானும்
கனத்துவிடுவேன்
என்பதால்.
 
     
 

பனித்துளி

   நிலவையும்
   சூரியனையும்
   காதலிக்கிறது
   பனித்துளி
   இரண்டும்கெட்டான்
    காதல்.
     

உதயம்

   சூர்யோதயம்
   சந்திரோதயம்
   அழகாக
    காதல்
    மட்டும்
    அஸ்தமனமாய்.    

ஒதுக்கீடு

   அச்சிடப்பட்டிருந்தது
    இதர
    ஜாதிகள்
    என்று.
    பிற்படுத்தப்பட்டனர்,
    முதன்மையானவர்கள்
    ஜாதியின்
    அடிப்படையில்.     
  
 

நம்பிக்கை

  தசைகள் 
  தளர்ந்தாலும்
  மூன்றாம்
  காலாக
  ஊன்றுகோலையும்,
  முதல் 
  கையாக
  தன்னம்பிக்கையுடனும்
  இன்றைய
  மூத்த
  குடிமகன்கள்.
 
 
     

சுகமான சுமைகள்

  வௌவாலாய்
  துடிப்புடன் 
   பறக்கின்றேன்
   பழைய
   நினைவகளுடன்,
   தலை கீழாய்
   தொங்கியும்
   கிடைக்கவில்லை
   அந்த 
   சுகமான
   சுமைகள்.
   
 
   
 
 
 

அம்மா

            அம்மா 
            என்ற
           மூன்று 
           எழுத்துக்களை
           சொந்தமாக்கிக்   
           கொண்டது
           உயிர்
           என்ற
           சொல். 

அம்மா

  முதல் எழுத்தில்
  தொடங்கும் 
  அவள்
  முதன்மையாய் 
   என்றும்
   அனைவருக்கும்.